அன்பு மைந்தர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
அக்டோபர் 2011 ல் பயிற்சி முடித்து பணி மாற்றம் பெரும் நண்பர்களுக்கு 24ஆகஸ்ட் 2011 அன்று சேரே எ பஞ்சாப் ஹோடேலில் மிகவும் சிறப்பாக நடந்தது. விருந்தினருக்கு நினைவுப் பரிசும் பெண்களுக்கு இசை நாற்காலி போட்டியும் நடத்தி பரிசும் வழங்கப்பட்டது. நண்பர்களும் குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் மகிழ்ந்து பேசி நேரம் செலவிட்டது ஒரு இனிமையான மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
விழாவில் தோப்பு புத்தகம் இரண்டாவது மலர் வெளியிடப்பட்டது. நம் நண்பர்களின் படைப்புகளை கொண்டு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இப்புத்தகம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.
பழைய நண்பர்கள் தங்கள் படைப்பை அனுப்ப விரும்பினால் தயவு செய்து நமது மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் படைப்பை அனுப்ப வேண்டுகிறோம் .
No comments:
Post a Comment