Monday, October 24, 2011

வாழ்த்துகள்

 கடந்த சில மாதங்களில் திருமணம் செய்த நமது நண்பர்களுக்கு மண்ணின் மைந்தர்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். D E M  100 முருகன், அன்பு செழியன் ஆகியோருக்கு வாழ்த்துகள். 
D C  E  102 திரு சுரேஷ் அவர்களுக்கு டிசம்பர் 27  அன்று திருமணம் நடை பெற உள்ளது.  திருமண வாழ்வில் அவர் எல்லா செல்வங்களையும் பெற நாம் வாழ்த்துவோமாக.

நண்பர் அன்பு செழியன் மிகுந்த ஆவலோடு நமது அமைப்பின் செயல்பாடுகளை வினவுகிறார்.  இது போன்ற நண்பர்களின் ஊக்கத்தினால் தான் நாங்களும் உற்சாகத்துடன் செயல்படுகிறோம். மற்ற நண்பர்களும் இந்த இணையத்தின் வாயிலாக தொடர்பு கொண்டால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். 
  வரும் நாட்களில் facebook மற்றும் twitter ல் ஒரு குழு அமைக்க உள்ளோம்.  நாடெங்கும் உள்ள நண்பர்கள் ஆண்ட குழுவில் இனைய வேண்டுகிறோம்.

பணி மாற்றம் அக்டோபர் 2011

அக்டோபர் 2011  ல் பணி மாற்றம் பெற்ற நமது நண்பர்களின் விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளது.  விரிவான தகவல்களுக்கு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். 
DAA-83
Nagaraj                      -           Ambala
Jaya Krishna Kumar -           Gaya
Jayaraman                 -           Kolkata
Ranjit                          -           Chandigarh
Uttarakannan            -           Pathankot
DEM – 101
Dinesh                        -           Kargil
Karthik                       -           Manipur
Dilli  Babu                  -           GREF
DCE – 101
Manikandan                -           Chandigarh
நண்பர்கள் அவர்கள் குடும்பத்தினருடன் சந்தோசமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். 



பொங்கல் 2011

நமது கல்லூரியில் ஜனவரி 2011 அன்று    பொங்கல் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  அணைத்து நண்பர்களின் ஒத்துழைப்புடன் இனிதாக நடை பெற்ற அந்த விழாவின் புகைப்படங்களை இந்த பதிவில் வெளியிடுவதை பெருமையாக நினைக்கிறோம். நண்பர்கள் இதை பார்க்கும் போது கண்டிப்பாக பழைய நண்பர்கள் உடன் இருப்பது போன்றே உணருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.








வழி அனுப்பு விழா ஆகஸ்ட் 2011

அன்பு மைந்தர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.  
அக்டோபர் 2011 ல் பயிற்சி முடித்து பணி மாற்றம் பெரும் நண்பர்களுக்கு 24ஆகஸ்ட் 2011 அன்று சேரே எ பஞ்சாப் ஹோடேலில் மிகவும் சிறப்பாக நடந்தது.  விருந்தினருக்கு நினைவுப் பரிசும் பெண்களுக்கு இசை நாற்காலி போட்டியும் நடத்தி பரிசும் வழங்கப்பட்டது.  நண்பர்களும் குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் மகிழ்ந்து பேசி நேரம் செலவிட்டது ஒரு இனிமையான மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. 
விழாவில் தோப்பு புத்தகம் இரண்டாவது மலர் வெளியிடப்பட்டது.  நம் நண்பர்களின் படைப்புகளை கொண்டு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இப்புத்தகம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.
பழைய நண்பர்கள் தங்கள் படைப்பை அனுப்ப விரும்பினால் தயவு செய்து நமது மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் படைப்பை அனுப்ப வேண்டுகிறோம் .